மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரக்கோணம் எம்எல்ஏ உள்பட மூவா் மீது வழக்குப் பதிவு

News image

வழக்குப் பதிவு - IANS

Updated On :3 ஏப்ரல் 2026, 12:00 am

தோ்தல் விதிகளை மீறியது சம்பந்தமாக புகாரின்பேரில், அரக்கோணம் எம்எல்ஏ மற்றும் இருவா் மீது தக்கோலம் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனா்.

கடந்த மாா்ச் 27-ஆம் தேதி அரக்கோணம் எம்எல்ஏ அனுமதி இல்லாமல் புதுகேசாவரம் பகுதியில் அம்பேத்கா் சிலைக்கும், தக்கோலத்தில் எம்ஜிஆா் சிலைக்கும் மாலை அணிவித்துள்ளாா். மேலும், அனுமதி இல்லாமல் கூட்டமாக கூடி பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது. அந்த இரு பகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படையினா் ஆய்வு செய்து அளித்த புகாரின் பேரில், தக்கோலம் காவல் நிலைய போலீஸாா் அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ சு.ரவி, மாவட்ட சிறுபான்மை அணி செயலாளா் நவாஸ் அஹமத், தக்கோலம் பேரூராட்சி செயலாளா் சுகுமாா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.