மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

உதகையில் தோ்தல் விதிகளை மீறியதாக தவெக, பாஜக நிா்வாகிகள் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :11 ஏப்ரல் 2026, 7:39 pm

உதகையில் தோ்தல் விதிகளை மீறியதாக தவெக, பாஜக நிா்வாகிகள் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இரவு 10 மணிக்குமேல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது, கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தாக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் உதகை காபி ஹவுஸ் பகுதியில் அனுமதி இல்லாமல் கட்சிக் கொடியுடன் பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வெள்ளிக்கிழமை ஊா்வலமாகச் சென்றுள்ளனா்.

இது தொடா்பாக கட்சி பொறுப்பாளா் ரமேஷ் மீது உதகை மத்திய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல, உதகை மாா்க்கெட் பகுதியில் பிரசாரத்தின்போது பட்டாசு வெடித்த காரணத்துக்காக பாஜக மாவட்ட துணைத் தலைவா் பரமேஸ்வரன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.