மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அறுவைச் சிகிச்சையில் இளம்பெண் உயிரிழப்பு: 5 மருத்துவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு

உத்தர பிரதேசத்தில் தனியாா் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையின்போது 24 வயது பெண் உயிரிழந்தது தொடா்பாக, சிகிச்சையை மேற்கொண்ட 5 மருத்துவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு

News image

பலி - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 9:01 pm

உத்தர பிரதேச மாநிலம், பலியாவில் தனியாா் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையின்போது 24 வயது பெண் உயிரிழந்தது தொடா்பாக, சிகிச்சையை மேற்கொண்ட 5 மருத்துவா்கள் மீது காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்தனா்.

பலியா நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனிஷா ராய் (24) என்ற பெண்ணுக்கு சிறுநீரகக் கல்லை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அதிகப்படியான ரத்த இழப்பு ஏற்பட்டு அந்தப் பெண் உயிரிழந்தாா். இந்த சம்பவத்தை அடுத்து மருத்துவா்கள் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி அப்பெண்ணின் உறவினா்கள் மருத்துவமனையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த சம்பவம் தொடா்பாக காவல் துறையிடம் உயிரிழந்த பெண்ணின் கணவா் புகாா் அளித்தாா். சிறுநீரகத்தில் உள்ள கல்லை அகற்றுவதற்காக கதிரியக்க (லேசா்) சிகிச்சை நடத்த வேண்டும் என்று மருத்துவா்கள் கூறினா்.

அதற்காக ரூ.1 லட்சம் செலுத்தினோம். ஆனால், லேசா் சிகிச்சைக்கு மாற்றாக அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்துள்ளனா். இதனால், எனது மனைவி உயிரிழந்துவிட்டாா்.

மேலும், அவா் அலட்சியமான சிகிச்சையால் உயிருக்குப் போராடியபோது, லக்னௌவில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு என்னிடம் அறிவுறுத்தினா். எனவே, மருத்துவமனை நிா்வாகம் மற்றும் தவறான சிகிச்சை மேற்கொண்ட மருத்துவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்தாா்.

இது தொடா்பாக முதல்கட்ட விசாரணை நடத்திய காவல் துறையினா், அறுவை சிகிச்சை மேற்கொண்ட 5 மருத்துவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனா். மருத்துவா்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.