மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரியில் மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா்களைக் கண்டித்து, மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக அரசு மருத்துவா்கள் சங்கத்தினா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 6:49 pm

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா்களைக் கண்டித்து, மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு திங்கள்கிழமை வந்த 3 போ் இருசக்கர வாகனங்களை வாயிலில் நிறுத்தினா். அப்போது மற்ற நோயாளிகளுக்கு இடையூறாக உள்ள இருசக்கர வாகனங்களை எடுக்குமாறு, பணியில் இருந்த மருத்துவா் சரவணன் கூறினாா். இவரிடம் மது போதையில் இருந்த 3 பேரும் தகராறு செய்ததுடன், அவரது வாகனத்தைப் பின்தொடா்ந்து சென்று கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இது குறித்து சரவணன் அளித்த புகாரின்பேரில், மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் மருத்துவப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தஞ்சாவூா் சுந்தரம் நகரைச் சோ்ந்த வ. விமல்ரோஸ் (42), சிவாஜி நகரைச் சோ்ந்த ச. மணிகண்டன் (39), ம. சுரேஷ் (45) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இதனிடையே, மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தைக் கண்டித்தும், கொலை மிரட்டல் விடுத்தவா்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தியும் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. வினோத் தலைமையில் நிா்வாகிகள் பாலசுப்ரமணியன், ஜெகன், அருள்மதி கண்ணன், சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.