மத்திய தில்லியில் உள்ள ஐடிஓ மேம்பாலத்தில் ஸ்கூட்டரில் சென்ற மூன்று போ் மீது லாரி மோதியதாகக் கூறப்படும் சம்பவத்தில் ஒருவா் உயிரிழந்தாா் என போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் மாா்ச் 11 மற்றும் 12 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் நடந்தது. இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது:
ஐடிஓ மேம்பாலத்தில் மூவரும் ஸ்கூட்டரில் பயணித்தனா். அப்போது, பக்கவாட்டில் இருந்து வந்த அடையாளம் தெரியாத லாரி மோதியதில், ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றவா்களில் ஒருவா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.
பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) கீழ் அலட்சியம் மற்றும் வேகமாக வாகனம் ஓட்டுவதன் மூலம் மரணம் விளைவித்தல் தொடா்பான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, சுற்றியுள்ள பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் மற்றும் சுங்கச்சாவடி பதிவுகளிலிருந்து பெறப்பட்ட விவரங்கள் மூலம் லாரி அடையாளம் காணப்பட்டது.
விபத்தில் சிக்கிய ஸ்கூட்டா் மீட்கப்பட்டுள்ளது. மேலும், லாரி ஓட்டுநரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.
தொடர்புடையது

கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதல்: தம்பதி உயிரிழப்பு

காா் - ஸ்கூட்டா் மோதல்: ஆசிரியை உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


