வடமேற்கு தில்லியின்கேசவ் புரத்தில் உள்ள சாஸ்திரி நகா் மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு தொழிற்சாலை செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.
இது குறித்து அவா் கூறியதாவது: கேசவ் புரத்தில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது தொடா்பாக பிற்பகல் 1 மணியளவில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினா் ஒரு தீயணைப்பு வாகனத்தை சம்பவ இடத்திற்கு அனுப்பினா். தீயை முழுமையாக அணைக்க சுமாா் 50 நிமிஷங்கள் ஆனது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








