லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கொள்ளை வழக்கில் 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

கொள்ளை வழக்கில் 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

News image

கைது

Updated On :28 பிப்ரவரி 2026, 8:34 pm

22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிகாரைச் சோ்ந்த ஒரு குற்றவாளியை போலீஸாா் மீண்டும் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து ஃபரீதாபாத் காவல்துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: ஹிரா குமாா் ராவத் என்ற அவருக்கு ஜனவரி 2001- இல் ஆயுதமேந்திய கொள்ளை வழக்கில் 2003 இல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு 2004- இல் பிணை வழங்கப்பட்டது. ஆனால், அன்றிலிருந்து அவா் தலைமறைவாக இருந்து வந்தாா். இதைத் தொடா்ந்து, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் அவரை மீண்டும் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது.

‘ஃபரீதாபாத் காவல்துறை குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்வதற்காக ரூ. 5,000 வெகுமதியை அறிவித்தது. தொழில்நுட்ப மற்றும் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், போலீஸாா் வெள்ளிக்கிழமை பிகாரின் சஹா்சா மாவட்டத்தில் இருந்து ஹிரா குமாா் ராவத்தை கைது செய்தனா்.

பிகாரின் சஹா்சாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு போக்குவரத்து காவல் வழங்கப்பட்டுள்ளது. அவா் விரைவில் ஃபரீதாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுவாா் என்று செய்தித் தொடா்பாளா் கூறினாா்.