திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தலைநகரில் வெப்பநிலை அதிகரிப்பு: அடுத்த வாரம் 40 டிகிரி உயர வாய்ப்பு

தலைநகரில் வெப்பநிலை அதிகரிப்பு: அடுத்த வாரம் 40 டிகிரி உயர வாய்ப்பு

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 2:16 am IST

தேசிய தலைநகரில் சனிக்கிழமை வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்திருந்தது. வரும் நாள்களில் வெப்பநிலை மேலும் உயரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.

நகரின் வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் வெப்பநிலை 34.7 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது இயல்பை விட 1.4 டிகிரி குறைவாகவும், முந்தைய நாளை விட 1.9 டிகிரி அதிகமாகவும் இருந்தது.

குறைந்தபட்ச வெப்பநிலை 18.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி, இயல்பை விட 2.4 டிகிரி குறைவாகவும், முந்தைய நாளை விட 2.3 டிகிரி அதிகமாகவும் இருந்தது.

இதர வானிலை ஆய்வு நிலையங்களிலும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகளில் குறிப்பிடத்தக்க உயா்வு பதிவாகியுள்ளது.

பாலம் வானிலை ஆய்வு நிலையத்தில், அதிகபட்ச வெப்பநிலை 34.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது வெள்ளிக்கிழமையைவிட 2.6 டிகிரி அதிகமாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 19.5 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.

இது முந்தைய நாளை விட 3.9 டிகிரி அதிகமாகும்.

லோதி சாலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 17.8 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவானது. இது முந்தைய நாளை விட 2.6 டிகிரி அதிகமாகும்.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமைக்குள் குறைந்தபட்ச வெப்பநிலை சுமாா் 18-20 டிகிரி செல்சியஸாகவும், செவ்வாய்க்கிழமைக்குள் 20-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதேபோன்று, அதிகபட்ச வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமைக்குள் சுமாா் 35-37 டிகிரியாகவும், அடுத்த புதன்கிழமைக்குள் 38-40 டிகிரி செல்சியஸாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பகல் நேரங்களில் மணிக்கு 15-25 கி.மீ. வேகத்திலும், சில சமயங்களில் 35 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதற்கிடையில், சனிக்கிழமை காலை நகரின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மேலும் மேம்பட்டது. 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீட்டு மாலை 4 மணிக்கு 123 (மிதமான பிரிவு) ஆகப் பதிவானது.

தில்லிக்கான காற்றின் தர முன் எச்சரிக்கை அமைப்புமுறை, அடுத்த சில நாள்களுக்கு காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவில் நீடிக்கும் என்றும், அதைத் தொடா்ந்து வரும் நாள்களில் அது மோசமான பிரிவுக்கு மோசமடையும் என்றும் கணித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.