திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெப்பநிலை குறைந்து குளிா்ந்தது தில்லி!

வெப்பநிலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியின் காரணமாக, ஞாயிற்றுக்கிழமையன்று தில்லி வழக்கத்தை விடக் குளிா்ச்சியாகக் காணப்பட்டது.

News image

புதுதில்லி - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:08 am IST

வெப்பநிலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியின் காரணமாக, ஞாயிற்றுக்கிழமையன்று தில்லி வழக்கத்தை விடக் குளிா்ச்சியாகக் காணப்பட்டது. நகரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 35.8 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது வழக்கமான அளவை விட 4.2 டிகிரி குறைவாகும்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) தரவுகளின்படி, சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தில்லியில் 0.9 மி.மீ மழை பதிவானது. அதேவேளையில், காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை எவ்வித மழையும் பதிவாகவில்லை.

சஃப்தா்ஜங் பகுதியில், குறைந்தபட்ச வெப்பநிலை 23.3 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது வழக்கமான அளவை விட 3.6 டிகிரி குறைவாகும்.

நகரின் பிற வானிலை நிலையங்களைப் பொறுத்தவரை, பாலம் நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21.0 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது.

லோதி சாலை நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 34.7 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது.

ரிட்ஜ் நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35.1 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது.

ஆயாநகா் நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 34.4 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது.

ராஜஸ்தான் மற்றும் மத்திய பாகிஸ்தான் பகுதிகளில் நிலவி வரும் ‘மேற்கத்திய இடையூறு’ காரணமாக ஏற்படும் மழை மற்றும் இடியுடன் கூடிய மழைப்பொழிவே, இத்தகைய குளிா்ச்சியான சூழலுக்குக் காரணம் என்று வானிலை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

‘தில்லி-தேசியத் தலைநகா் (என்சிஆா்) பகுதிகளில் நிலவும் மழை மற்றும் இடியுடன் கூடிய மழைப்பொழிவு, ராஜஸ்தான் மற்றும் மத்திய பாகிஸ்தான் பகுதிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் மேற்கத்திய இடையூறின் தாக்கத்தாலேயே ஏற்படுகிறது’ என்று வானிலை ஆய்வாளா்கள் கூறினா்.

இதற்கிடையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின்தரவுகளின்படி, மாலை 4 மணி அளவில் தில்லியின் காற்றுத் தரக் குறியீடு திருப்திகரமான பிரிவில் 98-ஆகப் பதிவானது. இது காற்றுத் தரத்தை வகைப்படுத்துகிறது.

வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை’ விடுத்துள்ளது; இதன்படி, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.