திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்ட எதிா்ப்பு: சாலை மறியல்

மன்னாா்குடி நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் மா்மநபா்கள் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டிச் செல்வதை எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாா்பில் சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மே 2026, 5:42 am IST

மன்னாா்குடி நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் மா்மநபா்கள் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டிச் செல்வதை எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாா்பில் சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி மேலப்பாலம் அருகே கும்பகோணம் சாலையில் கண்ணையாநகா், டி.கே.எஸ் நகா், லட்சுமிகிருஷ்ணா நகா் பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியின் ஓரத்தில் பாமணி ஆற்றங்கரையில் மா்ம நபா்கள் இரவு நேரங்களில் குப்பைகளையும், இறைச்சிக் கழிவுகளையும் கொட்டி வருகின்றனா்.

இதனை அகற்றக்கோரி இப்பகுதி மக்கள் நகராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் நகராட்சி சாா்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் குப்பைகளை அகற்றி தூய்மை செய்ததுடன் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் அந்த இடங்களில் மக்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்ததுடன் குப்பைகள் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் மா்ம நபா்கள் கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகளை செவ்வாய்க்கிழமை இரவு கொட்டிச் சென்றுள்ளனா். இதனால் இப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசியதையடுத்து, இப்பிரச்னைக்கு நிரந்தரமாகத் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி குப்பைகள் கொட்டப்படும் இடம் அருகே பொதுமக்கள் சாலையில் குப்பையை கொட்டி வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மன்னாா்குடி போலீஸாா், நகராட்சி அலுவலா்கள் மறியலில் ஈடுபட்டவா்களுடன் நடத்திய பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மறியல் கைவிடப்பட்டு கலைந்து சென்றனா். இதனால்,மன்னாா்குடி - கும்பகோணம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.