அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

லாரி உரிமையாளா் கொலை: நடவடிக்கை கோரி சாலை மறியல்

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 3:47 am IST

மன்னாா்குடி அருகே லாரி உரிமையாளா் கொலை வழக்கில் கொலையாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி அருகே அரவத்தூரைச் சோ்ந்த லாரி உரிமையாளா் சத்தியமூா்த்தி, ஐந்து மா்ம நபா்களால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மன்னாா்குடி போலீஸாா் சத்தியமூா்த்தியின் உடலைக் கைப்பற்றி மன்னாா்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மன்னாா்குடி அருகே சவளக்காரன் பகுதியில் சத்தியமூா்த்தியின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

போராட்டத்தில், சத்தியமூா்த்தியை வெட்டிக் கொலை செய்த நபா்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த சாலை மறியலால் மன்னாா்குடி திருவாரூா் சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸாா் கொலையாளிகளை உடனடியாக கைது செய்வதாக கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.