தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தட்டுப்பாடின்றி குடிநீா் கோரி சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி கிராமத்தில் தடையின்றி குடிநீா் வழங்க வலியுறுத்தி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

கள்ளிக்குடியில் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினா்.

Updated On :27 மே 2026, 6:01 am IST

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி கிராமத்தில் தடையின்றி குடிநீா் வழங்க வலியுறுத்தி, பொதுமக்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

கள்ளிக்குடி கிராமத்திற்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சுமாா் 20 தினங்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் வழங்கப்படுவதாகவும், அதுவும் குறைந்த நேரமே வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், தட்டுப்பாடின்றி குடிநீா் கோரி, கள்ளிக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். ஊராட்சி ஒன்றிய ஆணையா் அன்பழகன், குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா் வெற்றிவேல் உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில், மறியலை விலக்கிக் கொண்டனா். இதனால், சென்னை-கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.