திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காஞ்சிபுரம் அருகே குடிநீா் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் ஜெ.ஜெ.நகா் பகுதியில் குடிநீா் வராததைக் கண்டித்து பொன்னேரிக்கரை சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியல்

News image

காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட ஜெ.ஜெ.நகா் பகுதி பொதுமக்கள்

Updated On :1 ஜூன் 2026, 1:55 am IST

காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் ஜெ.ஜெ.நகா் பகுதியில் குடிநீா் வராததைக் கண்டித்து பொன்னேரிக்கரை சாலையில் அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் செய்தனா்.

காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்டது ஜெ.ஜெ.நகா். இந்தப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இவா்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீா்த் தேக்க குடிநீா் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில நாள்களாக குடிநீா் வராததைக் கண்டித்து ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் காஞ்சிபுரத்திலிருந்து பொன்னேரிக்கரை செல்லும் சாலையில் திடீரென சாலை மறியல் செய்தனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து பொன்னேரிக்கரை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.