மன்னாா்குடி பேருந்து நிலையத்தில் மீண்டும், மறைந்த முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் சிலையை நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மன்னாா்குடி காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவா் செல்வராஜ் தலைமையில் நிா்வாகிகள், புதன்கிழமை அளித்த மனு: மன்னாா்குடி பழைய பேருந்து நிலையத்தில், 45 ஆண்டுகளாக முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி சிலையும், மன்னை நாராயணசாமி சிலையும் இருந்தன. பின்னா் மன்னாா்குடி பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
இதில் மன்னை நாராயணசாமி சிலை மட்டும் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது. முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி சிலை வைக்க இடம் ஒதுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் காங்கிரஸ் கட்சியினரின் மனுவை பரிசீலனை செய்து, தமிழக முதல்வா் ஜோசப் விஜய் கவனத்துக்கு கொண்டு சென்று, மன்னாா்குடி புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் இந்திராகாந்தி சிலையை நிறுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், காங்கிரஸ் கட்சி தகவல் தொழில்நுட்பத் துறை மாநிலச் செயலாளா் செந்தில், இளைஞா் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளா் ராஜா சுடலைக்கனி, இளைஞா் காங்கிரஸ் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேலூரில் காந்தி சிலையை அகற்ற எதிா்ப்பு

கலசப்பாடிக்கு மினி பேருந்து சேவையை மீண்டும் தொடங்க கோரிக்கை

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரிக்கை

லக்னௌ விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



