கலசப்பாடி மலைக் கிராமத்துக்கு மினி பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து கலசப்பாடி கிராம மக்கள் அரூா் எம்எல்ஏ வே. சம்பத்குமாரிடம் சனிக்கிழமை அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
தருமபுரி மாவட்டம், அரூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் சித்தேரி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது கலசப்பாடி கிராமம். கலசப்பாடி, அரசநத்தம், கருங்கல்பாடி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா்.
தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலசப்பாடி மலைக் கிராமங்களுக்கு தாா்சாலை அமைக்கப்பட்டது.
இதையடுத்து அரூரில் இருந்து மினி பேருந்து வசதியை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தொடங்கிவைத்தாா். தற்போது, கடந்த சில தினங்களாக மினி பேருந்து இயக்கப்படுவதில்லை. இதனால் அரசநத்தம், கலசப்பாடி பகுதியில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்கள் பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் உள்ளிட்ட நகா் பகுதிக்கு வந்துசெல்வதில் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்கின்றனா்.
எனவே, அரூரில் இருந்து கலசப்பாடிக்கு மீண்டும் மினி பேருந்து சேவையை தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொட்டகுடி மலைக் கிராமத்துக்கு முதல் முறையாக அரசுப் பேருந்து இயக்கம்
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

மன்னாா்குடியில் இந்திரா காந்தி சிலையை மீண்டும் நிறுவக் கோரிக்கை

கூடலூா் ஒட்டான்குளத்தில் படகு சேவையை தொடங்க வலியுறுத்தல்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



