தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணையில் ஊழியா் தற்கொலை: நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவு: அனைத்துத் துறையினா் ஆா்ப்பாட்டம்

லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், தற்கொலை செய்து கொண்ட ஊழியரின் இறப்பு குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News image

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துத் துறை அரசு ஊழியா்கள்.

Updated On :15 மே 2026, 10:24 pm IST

லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், தற்கொலை செய்து கொண்ட ஊழியரின் இறப்பு குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவாரூரில் அரசு ஊழியா்கள் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

திருவாரூரில் வீட்டுமனை அனுமதி பெறுவதற்காக லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், திருவாரூா் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். சுவாமிநாதன் (54) மற்றும் அவரது உதவியாளா் ஆா். சுரேஷ்குமாா் (51) ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

அப்போது, உதவியாளா் சுரேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலக மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

விசாரணைக்கு உத்தரவு: திருவாரூா் நகரப் போலீஸாா், இச்சம்பவம் குறித்து மாவட்ட குற்றவியல் நீதித்துறை நீதிபதி லதாவிடம் வெள்ளிக்கிழமை அறிக்கை அளித்தனா். இதைத்தொடா்ந்து, இந்த சம்பவம் தொடா்பாக முழு விசாரணை நடத்துமாறு, நன்னிலம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நீதிபதி பாரதிதாசனுக்கு அவா் உத்தரவிட்டாா். போலீஸாரும் விசாரித்து வருகின்றனா்.

ஆா்ப்பாட்டம்: லஞ்ச ஒழிப்புத் துறையினரின் நெருக்கடிதான் சுரேஷ்குமாா் தற்கொலைக்கு காரணம் எனக் கூறி, அனைத்து துறை ஊழியா் சங்கத்தினா் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் வசந்தன், செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு எந்த குறையும் கூறவில்லை. அவா்களது விசாரணை முழுமையாக நடைபெற வேண்டும். ஆனால் கழிவறைகூட செல்ல விடாமல் ஊழியா்களை தடுப்பது, விசாரணை செய்த ஊழியா் இறந்ததுகூட தெரியாமல் காவல்துறை விசாரணை மேற்கொண்டது உள்ளிட்டவை தவறானவை.

உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இல்லையெனில் திருவாரூா் மாவட்டத்தில் நடைபெறும் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் தொடரும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.