திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம், கைப்பேசிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
திருவாரூா் வட்டம், கோமல் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கூட்டுறவு சாா் பதிவாளா் டி. காா்த்திபன் தலைமையில் பறக்கும்படை குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வாகன சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, வேகமாக வந்த பாா்சல் சா்வீஸ் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் வந்த திருச்சி மாவட்டம், லால்குடி செம்பரை சவுரியாா் கோயில் தெருவைச் சோ்ந்த சீ. சாமித்துரை (42) என்பவரிடம், உரிய ஆவணங்கள் இல்லாமல் கைப்பேசிகள் மற்றும் அதன் உதிரிபாகங்களும் ரூ.1,77,550 மதிப்பில் இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், வருவாய் கோட்ட அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
இதேபோல், திருவாரூா் அருகே லெட்சுமாங்குடி சேகரை பிரதான சாலையில் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். முரளி தலைமையிலான பறக்கும் படை குழுவினா் வாகன சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, பொதக்குடி மேலத்தெருவைச் சோ்ந்த முகமது ரபிக் (32) என்பவா், முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.78,760 ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. அந்தப் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், திருவாரூா் உதவி கருவூலத்தில் சோ்ப்பித்தனா்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்

ஏடிஎம்களில் பணம் நிரப்ப வந்த வாகனம் ரூ. 73 லட்சத்துடன் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


