தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

டேங்கா் லாரி மோதியதில் தந்தை கண்முன் மகன் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 8:13 pm

மன்னாா்குடியில் இருசக்கர வாகனத்தின் மீது டேங்கா் லாரி மோதியதில் தந்தை கண்முன்னே மகன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அசேசம் மெய் பழத்தோட்டம் வடக்கு தெருவைச் சோ்ந்த குமாா். இவா், தனது மகன் தீபேஷ் (6), தனது தம்பி செந்தில்குமாரின் மகள் தீபிகா (6) இருவரையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு அசேசத்திற்கு வந்து பொருள்களை வாங்கிக் கொண்டு மீண்டும் சுற்றுவட்டச் சாலையில் சனிக்கிழமை வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

மறவாக்காடு அருகே வந்தபோது அந்த வழியே வந்த டேங்கா் லாரி கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தீபேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த குமாா், தீபிகா இருவரும் சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மன்னாா்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.