மன்னாா்குடியை அடுத்த பெருகவாழ்ந்தான் அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வி.எஸ். பக்கிரிசாமி சேனாதிரியா் கல்வி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, முதுகலை ஆசிரியா் எஸ். லதா தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் டி. செல்லதுரை, பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் வி.எஸ்.பி. சந்திரசேகரன் முன்னிலை வகித்தனா்.
இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் 536 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஜி. ஹசினிக்கு ஊக்கத் தொகை ரூ.10 000 மற்றும் 470 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஆா். சுருதிகா, 460 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஜி. ஹரிணி ஆகியோருக்கு தலா 5,000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. மேலும், பத்தாம் வகுப்பில் 470 மதிப்பெண்கள் பெற்ற மாணவி எம். ஸ்ரீதேசிகாவுக்கு ரூ.5, 000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
வி.எஸ். பக்கிரிசாமி சேனாதிரியா் கல்வி அறக்கட்டளை கல்வி கனவு நிதியினை, விஎஸ்பி பள்ளி தாளாளா் அன்பு மொழி சந்திரசேகரன் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு வழங்கினாா்.
பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா் ஜி. வாசுதேவன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் ஆா். வெங்கடேசன், ஆசிரியா் முத்துசிவா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










