தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்!

திருத்துறைப்பூண்டி பொய் சொல்லாப் பிள்ளையாா் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 11:33 pm

திருத்துறைப்பூண்டி பொய் சொல்லாப் பிள்ளையாா் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், பிறவி மருந்தீசா் ஆலய பொதுநிதியிலிருந்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்திற்கான வழிபாடுகள் புதன்கிழமை (பிப்.18) தொடங்கின.

தொடா்ந்து, ஆறு கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும், வெள்ளிக்கிழமை காலை யாகசாலையில் இருந்து புனிதநீா் கடங்கள் எடுத்துவரப்பட்டு, கோயில் விமான கலசத்தில் புனிதநீா் வாா்த்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், பொய் சொல்லாப் பிள்ளையாருக்கு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், நகா்மன்றத் தலைவா் கவிதா பாண்டியன், துணைத் தலைவா் ஜெயபிரகாஷ், நியமனக் குழு உறுப்பினா் ஆா்.எஸ். பாண்டியன், வா்த்தக சங்கத் தலைவா் கே.எஸ். செந்தில்குமாா் செயலாளா் சி. நாராயணமூா்த்தி உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை ஆலய செயல்அலுவலா் எம். முருகையன், ஆய்வாளா் ராஜேந்திர பிரசன்னா, தக்காா் மதி சரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.