மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி தேரடி சக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 மார்ச் 2026, 1:09 am

மன்னாா்குடி தேரடி சக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டு, சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவந்தன. இப்பணிகள் அனைத்தும் அண்மையில் நிறைவடைந்தன.

இதைத்தொடா்ந்து, கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெற்ற யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்றதும், வெள்ளிக்கிழமை காலை யாகசாலையில் இருந்து புனிதநீா் கடங்கள் எடுத்துவரப்பட்டு, கோயிலின் விமானக் கலசத்தில் புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, மூலவா் சக்தி விநாயகா் மற்றும் துா்க்கை அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி உற்சவம் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.