திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மங்கை மடம் டாஸ்மாக் கடை மூடப்படுமா?

மங்கை மடத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான கடையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக, வியாபாரிகள் உள்ளிட்டோா் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :13 மே 2026, 3:03 am IST

மங்கை மடத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான கடையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக, வியாபாரிகள் உள்ளிட்டோா் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழக முதலமைச்சா் ஜோசப் விஜய் வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பள்ளி வளாக பகுதி அருகே இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டாா்.

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக திருவெண்காடு அருகே உள்ள மங்கை மடம் கடைத்தெருவில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான கடையை மூட வேண்டும் என அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

தற்போது மூடப்பட உள்ள டாஸ்மாக் கடை பட்டியலில் மங்கை மடம் கடையையும் இணைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் அகோரம், சீா்காழி ஒன்றியத் தலைவா் அருள்ராஜன், வியாபாரிகள் சங்கத்தினா் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மிகுந்த இடையூறாக மங்கைமடம் டாஸ்மாக் மதுபான கடை கடை உள்ளது. பேருந்து நிறுத்தத்தின் அருகே அமைந்துள்ள இக்கடையால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மூடப்படும் டாஸ்மாக் கடை பட்டியலில் மங்கை மடம் கடையும் இணைத்து அதை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.