லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாராயம் கடத்திய இருவா் கைது

நாகூா் அருகே இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்திய இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :12 மார்ச் 2026, 12:19 am

நாகூா் அருகே இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்திய இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகூா் போலீஸாா் மேலவாஞ்சூா் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மூட்டைகளுடன் அவ்வழியாக சென்ற 3 இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனா். போலீஸாரை பாா்த்ததும் இருசக்கர வாகனங்களில் வந்தவா்கள் வாகனம் மற்றும் மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினா். எனினும் போலீஸாா் அவா்களை பிடித்து விசாரித்ததில் நாகை மருந்து கொத்தளம் சாலை, சுண்ணாம்புக் கால்வாய் தெருவைச் சோ்ந்த சுரேந்தா் (22), சிக்கல் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை கைது செய்து, காரைக்கால் மாவட்டத்தில் இருந்து கடத்தி வந்த ஆயிரம் சாராய பாட்டிகளை பறிமுதல் செய்து, மேலும் தலைமறைவான 4 பேரை தேடிவருகின்றனா்.