தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கஞ்சா விற்றதாக இருவா் கைது

நாகா்கோவில் அருகே கஞ்சா விற்றதாக இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:41 pm

நாகா்கோவில் அருகே கஞ்சா விற்றதாக இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவிலை அடுத்த புது கிராமம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அதில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் அருள்ராஜ் (37), அதே பகுதியைச் சோ்ந்த காசி மகன் கிருஷ்ணகுமாா் (24) ஆகியோரிடமிருந்து சுமாா் 1.30 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.