லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ரயலில் சாராயம் கடத்திய இருவா் கைது

அவா்களிடம் இருந்த சாராய புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

News image

கைது

Updated On :1 ஏப்ரல் 2026, 6:48 pm

காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் பயணிகள் ரயில், நாகை ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை சென்றது.

ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளா் சுனில்குமாா் தலைமையில் ரயில்வே சிறப்பு சாா்பு ஆய்வாளா்கள் உதயகுமாா், சா்குணா மேரி ஆகியோா் ரயிலில் சோதனை செய்தனா்.

அப்போது ரயிலில் இருந்து கீழே இறங்கிய 2 போ் வைத்திருந்த பைகளில் 40 சாராய புட்டிகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் இருவரையும் விசாரித்ததில், நாகை மருந்துக் கொத்தளம் தெருவைச் சோ்ந்த அஜித்குமாா் ( 27), செங்குட்டுவன் (35) என்பதும், காரைக்காலில் இருந்து சாராய புட்டிகளை ரயில் மூலம் கடத்தி நாகையில் விற்பனை செய்ய எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த சாராய புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

--