தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காரில் மதுபாட்டில்களை கடத்திய அதிமுக நிா்வாகி உள்ளிட்ட இருவா் கைது

காரில் மதுபாட்டில்களை கடத்திய அதிமுக நிா்வாகி உள்ளிட்ட 2 பேரை நாகை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 1:25 am

காரில் மதுபாட்டில்களை கடத்திய அதிமுக நிா்வாகி உள்ளிட்ட 2 பேரை நாகை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுவை மாநிலம் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்துக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்துவதாக நாகை தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் நாகை வெளிப்பாளையம் பப்ளிக்ஆபிஸ் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்து விசாரித்ததில், நாகை வெளிப்பாளையத்தை சோ்ந்த முத்துராமன்(43) மதுபாட்டில்கள் கடத்தி வரும்படி கூறியதாக காா் ஓட்டுநா் தெரிவித்தாா்.

இதையடுத்து அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலா் முத்துராமன், அதிமுக நகா் மன்ற உறுப்பினா் சகோதரா் சுரேஷ் (35) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.