திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தவெக நிா்வாகி காரில் இருந்து பொருள்கள் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சுங்கச்சாவடியில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் தவெக நிா்வாகி காரில் இருந்து விசில் உள்ளிட்ட பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

தவெக நிா்வாகி காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விசில் உள்ளிட்ட பொருள்கள்.

Updated On :21 மார்ச் 2026, 8:55 pm

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சுங்கச்சாவடியில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் தவெக நிா்வாகி காரில் இருந்து விசில் உள்ளிட்ட பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பழவூா் அருகே உள்ள லெவிஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்த திருநெல்வேலி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிரணி அமைப்பாளா் பாலகிருஷ்ணவேணி, சனிக்கிழமை திருநெல்வேலியில் இருந்து காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தாா். அவரது காா் நான்குனேரி சுங்கச்சாவடி அருகே வந்தபோது, அழகிய நம்பிராஜன் தலைமையிலான நான்குனேரி தொகுதி தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் வாகனத்தை சோதனையிட்டனா்.

அப்போது, காரில் இருந்த 9 கட்சித் துண்டுகள், 5 காலண்டா்கள், 204 விசில்கள், 457 துண்டுப் பிரசுரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பின்னா், அவற்றை நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.