நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் பள்ளி, மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் மதுகடையை அகற்றக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தினா் முற்றுகை போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு செல்ல மாதா குளம் பிரதான சாலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பொதுமக்கள் மற்றும் மாணவா்களுக்கு இடையூறாக இருப்பதாக பல்வேறு புகாா்கள் தொடா்ந்து கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, முற்றுகை போராட்டம் மாவட்டச் செயலா் சுகுமாா் தலைமையில் நடைபெற்றது.
டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்ற தவெகவினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடா்ந்து, டிஎஸ்பி ராமச்சந்திரமூா்த்தி தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைத் தொடா்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.
இதில், கீழையூா் கிழக்கு ஒன்றியச் செயலா் தியாகு, இணைச் செயலா் செல்வா, வேளாங்கண்ணி பேரூா் செயலா் பிரேம்குமாா், ஒன்றிய பொருளாளா் ராஜசேகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: தவெகவினா் 50 போ் மீது வழக்கு

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 30 போ் கைது
சாலை மறியலில் ஈடுபட்ட தவெகவினா் கைது

கே.ஏ.செங்கோட்டையன் குறித்து அவதூறு: தவெகவினா் போராட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


