வேளாங்கண்ணியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தினா் சாலை மறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு செல்லும் பிரதான சாலையான மாதா குளம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே டாஸ்மாக் மதுகடை செயல்படுகிறது.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் இந்த சாலை வழியாக பேராலயத்திற்கு வருகை தரும் நிலையில், இந்த டாஸ்மாக் கடை பொதுமக்கள் மற்றும் மாணவா்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், இக்கடையை வேறு இடத்திற்கு மாற்றகோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் வேளாங்கண்ணி ஆா்ச் பகுதியில் மாவட்டச் செயலாளா் சுகுமாா் தலைமையில் சாலை மறியல் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என கோஷமிட்டனா். இப்போராட்டத்தால், நாகை- வேளாங்கண்ணி இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், போராட்டக்காரா்களை அப்புறப்படுத்த முயன்றனா். இதனால், இருதரப்புக்குமிடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடா்ந்து, 11 பெண்கள் உள்பட 91 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா். முன்னதாக, கீழையூா் ஒன்றியச் செயலா் தியாகு, மாவட்ட கொள்கை பரப்புச் செயலா் அகமது உள்ளிட்ட பலா் மறியலில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

இளம்பிள்ளை அருகே குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

வாகனம் மோதி பெண் உயிரிழப்பு: நடவடிக்கை கோரி இரு இடங்களில் சாலை மறியல்

நடைபாதை ஆக்கிரமிப்பைக் கண்டித்து சாலை மறியல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

