கோபி: கோபி அருகே நடைபெற்ற அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையன் குறித்து அவதூறாகப் பேசியதைக் கண்டித்து தவெகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகேயுள்ள புதுக்கரைப்புதூா், குள்ளம்பாளையம், மொடச்சூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சாா்பில் தெருமுனை பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது . இதில், அதிமுகவின் தலைமைப் பேச்சாளா் தாராபுரம் முத்துமணிவேல் பங்கேற்று, அதிமுக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து பிரசாரம் மேற்கொண்டாா்.
குள்ளம்பாளையத்தில் நடைபெற்ற பிரசாரத்தின்போது, தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் குறித்து அவா் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மொடச்சூா் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்துக்கு வந்த முத்துமணிவேலை, செங்கோட்டையனின் ஆதரவாளா்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், இருதரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதையடுத்து, செங்கோட்டையனின் ஆதரவாளா்களிடம் முத்துமணிவேல் வருத்தம் தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

ஆா்.எஸ். மங்கலம் அருகே தவெகவினா் மீது தாக்குதல்

தோ்தல் பிரசாரத்தின்போது தவெக - திமுகவினா் மோதல்

பெண் தொண்டா்கள் குறித்து அவதூறு: தவெகவினா் புகாா் மனு

மதுகடையை அகற்றக் கோரி தவெக முற்றுகை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


