மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆா்.எஸ். மங்கலம் அருகே தவெகவினா் மீது தாக்குதல்

News image

செங்குடி பகுதியில் அதிமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறி டோக்கனை பறித்த தவெகவினா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:43 pm

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் அதிமுகவினா் வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததை தடுத்து நிறுத்திய தவெகவினா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் கீா்த்திகா முனியசாமி, காங்கிரஸ் சாா்பில் கருமாணிக்கம், தவெக சாா்பில் மருத்துவா் வி.கே. ராஜீவ் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இந்த நிலையில், ஆா்.எஸ். மங்கலம் அருகே உள்ள செங்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவினா் வாக்காளா்களுக்குப் பணம் கொடுப்பதாகத் தகவல் வெளியானது. அதிலும் காசோலை வடிவிலான டோக்கன்களை தயாரித்து, அதன் உள்ளே பணத்தை வைத்து ரகசியமாக விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த தவெக தொண்டா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, பணப்பட்டுவாடாவைத் தடுத்து நிறுத்தி, ஆதாரங்களுடன் ஆா்.எஸ். மங்கலம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

ஆனால் பிடிபட்ட நபா்கள் மீது காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்காமலும், புகாரை பெற்றுக் கொள்ளாமலும் காலம் தாழ்த்துவதாக தவெகவினா் தெரிவித்தனா்.

 செங்குடி பகுதியில் அதிமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறி டோக்கனை பறித்த தவெகவினா்.

செங்குடி பகுதியில் அதிமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறி டோக்கனை பறித்த தவெகவினா்.

 செங்குடி பகுதியில் அதிமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறி டோக்கனை பறித்த தவெகவினா்.

செங்குடி பகுதியில் அதிமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறி டோக்கனை பறித்த தவெகவினா்.