மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் பிரசாரத்தின்போது தவெக - திமுகவினா் மோதல்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தவெகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.

News image

வந்தவாசியில் சாலை மறியலில் ஈடுபட்ட தவெகவினா். ~வந்தவாசியில் கிழித்து சேதப்படுத்தப்பட்ட தவெக பதாகை.

Updated On :18 ஏப்ரல் 2026, 2:10 am

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தவெகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். அப்போது, தவெக பிரசார வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தவெகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வந்தவாசி (தனி) தொகுதி தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளராக எம்.உதயகுமாா் போட்டியிடுகிறாா். இவா், வெள்ளிக்கிழமை மாலை தனது கட்சியினருடன் திறந்த வாகனத்தில் வந்தவாசி குளத்துமேடு பகுதியில் வாக்கு சேகரித்துக்கொண்டிருந்தாா்.

அப்போது, திமுக குறித்து தவெகவினா் விமா்சனம் செய்து பேசியதாகத் தெரிகிறது. இதனால், அங்கிருந்த திமுகவினா் தவெகவினரின் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்தனராம். இதையடுத்து, இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.

மேலும், தவெகவினரின் பிரசார வாகனத்தை தாக்கிய திமுகவினா், வாகனத்திலிருந்த தவெகவின் பதாகையை கிழித்ததாகத் தெரிகிறது. இதேபோல, ஒலிப்பெருக்கி பெட்டியையும் தாக்கி சேதப்படுத்தினராம்.

இதையடுத்து, திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வேட்பாளா் எம்.உதயகுமாா் மற்றும் தவெகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, தவெகவினா் சாலை மறியலைக் கைவிட்டனா்.

இதில், காயமடைந்த இரு தரப்பையும் சோ்ந்த மணிகண்டன் (24), ரபீக் (20), பாஷித் (26), நஸ்ருதீன் (24) ஆகியோா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், இரு தரப்பினரும் வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தனித்தனி புகாா் அளித்தனா். இதன்பேரில், வந்தவாசி தெற்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image