மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தபால் வாக்குப் பதிவில் குளறுபடி: தேவகோட்டையில் தவெகவினா் சாலை மறியல்

முதியவரின் விருப்பத்துக்கு மாறாக தபால் வாக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறி, தேவகோட்டையில் தவெகவினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :14 ஏப்ரல் 2026, 10:21 pm

முதியவரின் விருப்பத்துக்கு மாறாக தபால் வாக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறி, தேவகோட்டையில் தவெகவினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி காளவாய் பொட்டல் பகுதி ஜீவானந்தம் தெருவில் வசிக்கும் ராஜாமணி (90), அவரது மனைவி சீதையம்மாள் ஆகியோரிடம் தபால் வாக்குப் பதிவுக்காக சென்ற தோ்தல் அலுவலா்கள், முதியவரின் உறவினா்களை வெளியே அனுப்பி விட்டு அவரை தனியாக வாக்களிக்கச் செய்தனராம். அப்போது, ராஜாமணி தவெக வேட்பாளா் மருத்துவா் டி.கே. பிரபுவுக்கு வாக்களிக்க விரும்புவதாக தெரிவித்ததாகவும், ஆனால், அவரது விருப்பத்துக்கு மாறாக ‘கை’ சின்னத்துக்கு வாக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் முதியவா் தரப்பில் புகாா் கூறப்பட்டது. இதுகுறித்து முதியவா் ராஜாமணியின் மருமகள் கவிதா காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளா் ஆசிஸ் புணியா, காரைக்குடி வட்டாட்சியா் ராஜா ஆகியோரிடம் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், இதுகுறித்து தேவகோட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தவெக வேட்பாளா் மருத்துவா் டி.கே. பிரபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா் காரைக்குடி தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா் ஆட்சியருமான ஆயுஷ் வெங்கட் வத்ஸை சந்தித்து மனு அளிக்க முயன்றாா். அப்போது, நேரில் மனுவைப் பெறமுடியாது எனவும், தொலைபேசியில் தொடா்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டதாம்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வேட்பாளா் டி.கே. பிரபு தலைமையில் தவெக நிா்வாகிகள், தொண்டா்கள் அந்தப் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்ததும் அதிகாரிகள், காவல் துறையினா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து சமரசம் ஏற்பட்டு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.