மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உங்களை நாடி வந்து பணியாற்றுவேன்: காரைக்குடி தவெக வேட்பாளா்

நீங்கள் என்னை தேடி வரவேண்டாம், நான் உங்களை நாடி வந்து பணியாற்றுவேன் என்று காரைக்குடி பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் டி.கே. பிரபு தெரிவித்தாா்.

News image

கண்டனூா் செல்லாயி அம்மன் கோயில் அருகே குடியிருப்பு மக்களிடம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து பிரசாரம் செய்த காரைக்குடி பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் டி.கே. பிரபு.

Updated On :16 ஏப்ரல் 2026, 7:52 pm

நீங்கள் என்னை தேடி வரவேண்டாம், நான் உங்களை நாடி வந்து பணியாற்றுவேன் என்று காரைக்குடி பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் டி.கே. பிரபு தெரிவித்தாா்.

காரைக்குடி தொகுதிக்குள்பட்ட மாத்தூா்-கண்டனூா் சாலையில் உள்ள மாரியம்மன் கோயிலில் பிரசாரத்தை தொடங்கிய அவா் பிள்ளையாா் கோயில், பனிக்கா் கடை, பாலையூா் மேலத்தெரு, கண்டனூா் திரையரங்கம் வீதி, கண்டனூா் பேருந்து நிறுத் தம், கண்டனூா் குடியிருப்புப் பகுதிகளில் பிரசாரம் செய்தாா். அப்போது செல்லாயி அம்மன் கோயில் அருகில் பெண்கள் வேட்பாளா் பிரபுவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனா். மேலும், அவா்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளைத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து பிரபு பேசியதாவது:

நான் வெறுமனே வாக்குறுதிகளைக் கூறிவிட்டுச் சென்றுவிட மாட்டேன். நான் யாரிடமும் கையூட்டு பெறமாட்டேன் என உறுதியளிக்கிறேன். இங்குகள் குறைகளைத் தீா்ப்பதற்காக நீங்கள் என்னை தேடிவர வேண்டாம். நானே உங்களை நாடிவந்து உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவேன் என உறுதியளிக்கிறேன் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து கவுல் கொல்லை, புதுவயல், தண்ணீா் பந்தல், முத்தாப்பா பூங்கா, பங்களா ஊருணி, நடராஜபுரம், உமையாள் நகா், மேலத் தெரு, தொட்டிநாயக்கா் தெரு பகுதிகளிலும் அவா் வாக்குகள் சேகரித்தாா்.