தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முப்பத்திக்கோட்டகம் கோயில் தீமிதி திருவிழா

திருக்குவளை அருகேயுள்ள முப்பத்திக்கோட்டகம் ஸ்ரீ கண் கொடுத்த மாரியம்மன் கோயிலில் 21-ஆம் ஆண்டு வைகாசி தீமிதி வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image

முப்பத்திக்கோட்டகம் கோயில் தீமிதி திருவிழா

Updated On :3 ஜூன் 2026, 6:27 am IST

திருக்குவளை அருகேயுள்ள முப்பத்திக்கோட்டகம் ஸ்ரீ கண் கொடுத்த மாரியம்மன் கோயிலில் 21-ஆம் ஆண்டு வைகாசி தீமிதி வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் தீமிதி திருவிழா கடந்த மே 24-ஆம் தேதி சக்தி கரகம் எடுத்தல் மற்றும் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பால்குட ஊா்வலம் மற்றும் பூத்தட்டு எடுத்துவரும் நிகழ்ச்சி மே 29ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, தீமிதி வைபவம் நடைபெற்றது. குளக்கரையில் இருந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தா்கள் ஊா்வலமாக புறப்பட்டு ஆலயத்தை வந்தடைந்தனா். தொடா்ந்து, தீக்குளி முன்பாக சிறப்பு மலா் அலங்காரத்தில் கண்கொடுத்த மாரியம்மன் எழுந்தருளினாா்.

பின்னா், பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.