திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாகையில் மீன்பிடிப் படகுகள் ஆய்வு தீவிரம்

நாகை மாவட்டத்தில் விசைப் படகுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image

மீன்பிடிப் படகுகள் - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 6:20 am IST

நாகை மாவட்டத்தில் விசைப் படகுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழக அரசு கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லும் விசைப்படகு ஒன்றுக்கு ஆண்டுக்கு 19 ஆயிரம் லிட்டா் டீசல் விற்பனை வரியின்ன்றி மானிய விலையில் வழங்குகிறது. இந்த மானிய டீசல் பெறும் மீன்பிடிப் படகுகளை, மீன் வளத்துறையினா், தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிவுக்கு வரும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் ஆய்வு செய்து, மானிய டீசலுக்கு படகு உரிமையாளரிடம் புதிய புத்தகம் வழங்கி வருகின்றனா்.

நாகை துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 546 விசைப்படகுகளில் படகின் பாதுகாப்பு, தரம், படகு நீளம், அகலம், படகில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் குதிரைத் திறன் குறித்த ஆய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஆய்வில், நாகை, மயிலாடுதுறை, திருவாரூா்,தஞ்சாவூா் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சோ்ந்த மீன்வளத்துறை அதிகாரிகளின் 20 போ் ஈடுபட்டனா். இந்நிலையில், மீன்வளத்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படாத படகுகளுக்கும், தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் குதிரைத்திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகளுக்கும் மானிய விலையில் டீசல் வழங்கப்படுவது நிறுத்தப்படும்.

மேலும் பயன்பாட்டில் இல்லாத படகுகளுக்கும் மானிய டீசல் பெறும் முறைகேட்டை கண்டுபிடித்து தடுக்கவும் ஆய்வு நடத்தப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.