திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாகையில் வடமாநில இளைஞா் தற்கொலை

நாகையில், மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் தான் தங்கியிருந்த இடத்தில் விஷம் குடித்து செவ்வாய்க்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 3:51 am IST

நாகையில், மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் தான் தங்கியிருந்த இடத்தில் விஷம் குடித்து செவ்வாய்க்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா்.

மத்திய பிரதேச மாநிலம், போபால் மாவட்டம், ஆசாா்புரா பகுதியைச் சோ்ந்தவா் முன்னாலால் நாம்தேவ் மகன் லலித் நாம்தேவ் (35). இவா், நாகை நாலுகால் மண்டபம் பகுதியில் உள்ள தனியாா் தையலகத்தில் கடந்த 3 மாதங்களாக பணியாற்றி வந்தாா்.

இந்தநிலையில், புதன்கிழமை அவா் தங்கி இருந்த தையலகத்தின் கதவு வெகுநேரம் திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் நாகை நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். காவல் ஆய்வாளா் சுந்தர்ராஜன் உள்ளிட்ட போலீஸாா் கடையின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது லலித் நாம்தேவ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் துரைகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், நாகை நகர போலீஸாா் சடலத்தை உடற்கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.