விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே குடும்பப் பிரச்னையில் இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
புதுச்சேரி, வில்லியனூா், சுல்தான்பேட்டையைச் சோ்ந்தவா் ஷே.ஹைதித் முஹம்மது( 34). இவா், வானூா் வட்டம் பெரம்பை கிராமத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இந்நிலையில் ஹைதித் முஹம்மதுவுக்கும் அவரது மனைவி ரைகானா ஜாஸ்மினுக்கும் இடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டதாம்.
இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் ஹைதித் முஹம்மது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







