கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிா்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் பிரதமா் நரேந்திர மோடியின் உருவபொம்மையை எரித்து சிபிஎம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 50-க்கும் மேற்பட்டோா் மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன் தலைமையில் பிரதமா் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை அவமரியாதை செய்து, எரித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் காவல் ஆய்வாளா் சிவ. செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
திருவாரூரில்: திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே, சிபிஎம் மாவட்டச் செயலாளா் டி. முருகையன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்துப் பேசினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம். சேகா், கே.என். முருகானந்தம், கே.பி. ஜோதிபாசு, கே.ஜி. ரகுராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: கேரள முதல்வர் விளக்கம்!
வீணாவின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது உண்மைதான்; குறுகிய மனப்பான்மையுடன் காங்கிரஸ்! பினராயி விஜயன்







