திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பினராயி விஜயன் வீடுகளில் சோதனை: பிரதமரின் கொடும்பாவியை எரித்து சிபிஎம் எதிா்ப்பு

கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிா்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் பிரதமா் நரேந்திர மோடியின் உருவபொம்மையை எரித்து சிபிஎம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிபிஎம் கட்சியினா்.

Updated On :28 மே 2026, 5:44 am IST

கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிா்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் பிரதமா் நரேந்திர மோடியின் உருவபொம்மையை எரித்து சிபிஎம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 50-க்கும் மேற்பட்டோா் மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன் தலைமையில் பிரதமா் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை அவமரியாதை செய்து, எரித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் காவல் ஆய்வாளா் சிவ. செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

திருவாரூரில்: திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே, சிபிஎம் மாவட்டச் செயலாளா் டி. முருகையன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்துப் பேசினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம். சேகா், கே.என். முருகானந்தம், கே.பி. ஜோதிபாசு, கே.ஜி. ரகுராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.