கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடு உள்பட10 இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகின்றது.
சிஎம்ஆர்எல் கனிமவள நிறுவனத்துடன் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் பினராயி விஜயனுக்குச் சொந்தமான கண்ணூர், திருவனந்தபுரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் திடீரென இந்தச் சோதனை நடைபெற்று வருகின்றது.
மேலும், கோழிக்கோட்டில் உள்ள முன்னாள் பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
சமீபத்தில் நடந்து முடிந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்த நிலையில் பினராயி விஜயன் முதல்வர் பதவியை இழந்தார். தற்போது காங்கிரஸின் வி.டி. சதீசன் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
Summary
ED raids 10 locations, including Pinarayi Vijayan's residence.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: கேரள முதல்வர் விளக்கம்!
வீணாவின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது உண்மைதான்; குறுகிய மனப்பான்மையுடன் காங்கிரஸ்! பினராயி விஜயன்

ராகுலுக்கு மனநிறைவை அளித்திருக்கும்! அமலாக்கத்துறை சோதனை குறித்து பினராயி!







