சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பூங்கொடி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ராஜரத்தினம் வரவேற்றாா். ஜமாபந்தி தொடக்க நாளை முன்னிட்டு மாதிரிவேளூா், வடரங்கம், அகரஎலத்தூா், கீழமாத்தூா், ஓலையாம்புத்தூா், குன்னம், கோபாலசமுத்திரம், சோதியக்குடி, புத்தூா், அரசூா், கொண்டல், வள்ளுவக்குடி, அகனி உள்ளிட்ட 18 வருவாய் கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், இலவச மனை பட்டா, பட்டா மாறுதல், திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, இருப்பிட சான்று, ஜாதி சான்று, வருமான சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தனா். மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










