17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கூடலூா் கோட்டத்தில் ஜமாபந்தி நிறைவு

கூடலூா் வருவாய்க் கோட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

News image

பயனாளிக்கு முதல்பட்டதாரிக்கான சான்று வழங்கும் கோட்டாட்சியா் குணசேகரன், வட்டாட்சியா் முனீஷ் ஆகியோா்.

Updated On :5 ஜூன் 2026, 12:03 am IST

கூடலூா் வருவாய்க் கோட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது. இதில், தேவா்சோலை குறுவட்டத்திலுள்ள செறுமுள்ளி, ஸ்ரீமதுரை, முதுமலை, பென்னை ஆகிய வருவாய் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் அளித்தனா்.

இரண்டாவது நாளான வியாழக்கிழமை கூடலூா் குறுவட்டத்துக்கு உள்பட்ட கூடலூா், பாடந்தொரை, தேவாலா, ஓவேலி ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பொதுமக்களிடமிருந்து 293 மனுக்கள் பெறப்பட்டன.

நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, ஜாதி சான்று, முதல் பட்டாதாரிக்கான சான்று, பட்டா மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டன. கோட்டாட்சியா் குணசேகரன் தலைமை வகித்து மனுக்களை பெற்று பரிந்துரை செய்தாா்.

இதில், வட்டாட்சியா் முனீஷ், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் கிருஷ்ணமூா்த்தி, துணை வட்டாட்சியா் ரமேஷ், வருவாய் ஆய்வாளா் ரேகா, கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.