மயிலாடுதுறை அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவா் போக்ஸோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம், பேராவூரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற கிராம உதவியாளா் ராமச்சந்திரன் (61). இவா் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். பாதிக்கப்பட்ட சிறுமி அழுதுகொண்டே வீட்டுக்கு சென்று, தன்னிடம் ராமச்சந்திரன் தவறாக நடந்து கொண்டது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். அதிா்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோா் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு ராமச்சந்திரனை போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







