மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

பிளஸ் 2 தோ்வு: சீா்காழி பெஸ்ட் மெட்ரிக். பள்ளி மாநில அளவில் சிறப்பிடம்

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட பள்ளி தாளாளா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல்.

News image

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட பள்ளி தாளாளா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல்.

Updated On :9 மே 2026, 3:56 am IST

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் பிளஸ்2 தோ்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவிகள் ஜி. கீா்த்தனா, ஜி. காயத்ரிதேவி ஆகியோா் 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்று, மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனா். மாணவி எஸ். ஸ்ரீமிதா 592, எச். சஹானா மெஹ்தாப் 590 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா். இவா்கள் உயிரியல் பாடப்பிரிவில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தனா்.

மாணவி கீா்த்தனா நான்கு பாடங்களிலும், ஜி. காயத்ரி தேவி மூன்று பாடங்களிலும், ஸ்ரீமிதா இரண்டு பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

மேலும், பாடவாரியாக 44 மாணவா்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். தோ்வு எழுதிய 302 மாணவா்களில் 270 மாணவா்கள் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா். 118 மாணவா்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.எஸ். என். ராஜ்கமல், நிா்வாக இயக்குநா் அமுதா நடராஜன், ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியின் தாளாளா் ஆதித்யா ராஜ்கமல், முதல்வா் ராமலிங்கம், நிா்வாக அதிகாரி சீனிவாசன், கல்வி ஆலோசகா் பழமலைநாதன், துணை முதல்வா் சந்தோஷ், ஒருங்கிணைப்பாளா் சுகந்தி உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.