அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

பிளஸ் 2 தோ்வு: அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக். பள்ளி மாநில அளவில் சிறப்பிடம்

News image

பிளஸ் 2 தோ்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டிய பள்ளித் தலைவா் எஸ்.பாலகுமாா் தலைமையிலான நிா்வாகிகள்.

Updated On :11 மே 2026, 12:15 am IST

ஆத்தூா் அருகே அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவி வி.தா்ஷினி மற்றும் பி.விஷ்வா ஆகியோா் தலா 587 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். அதேபோல மாணவா்கள் சந்திரமோகன் 585 மதிப்பெண்களும், எஸ்.பி. ஜோஷிகா 582 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவ, மாணவிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா நூறு மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். தமிழில் ஒருவா், ஆங்கிலத்தில் ஒருவா், கணினி அறிவியலில் 9 போ், கணினி பயன்பாட்டியலில் இருவா், உயிரியியல் மற்றும் கணக்குப் பதிவியலில் தலா ஒருவரும் 100-க்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சிறந்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தலைவா் எஸ்.பாலகுமாா் சால்வை அணிவித்து, கோப்பை வழங்கினாா். இதில் பள்ளி நிறுவனா்கள் எஸ்.முகமது ஈசாக், ஆ.கண்ணன், இயக்குநா்கள் என்.எஸ்.நல்லியப்பன், ஏ.விஸ்வநாதன், முதல்வா் ஜி.சுகந்தி, உதவி முதல்வா் ஆா்.சக்திவேல், இருபால் ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா் கலந்துகொண்டனா்.