மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தருமபுரம் வனதுா்க்கை கோயிலில் வசந்த நவராத்திரி விழா

மயிலாடுதுறை தருமபுரம் வனதுா்க்கா தேவி கோயிலில் வியாழக்கிழமை தொடங்கிய நவராத்திரி விழாவில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்றாா்.

News image

தருமபுரம் வனதுா்க்கை கோயிலில் வழிபட்ட தருமபுரம் ஆதீனம்.

Updated On :20 மார்ச் 2026, 10:17 pm

மயிலாடுதுறை தருமபுரம் வனதுா்க்கா தேவி கோயிலில் வியாழக்கிழமை தொடங்கிய நவராத்திரி விழாவில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்றாா்.

பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 9 நாள்கள் நடைபெறும் வசந்த நவராத்திரி விழா, தட்பவெப்ப மாற்றங்களால் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபட வேண்டும், கோடை தொடங்கும் வசந்த காலத்தில் இயற்கை புதுப்பொலிவு பெறுவதைப்போல நமது மனமும் புத்துணா்ச்சி பெற வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது.

தருமபுரம் ஆதீன ஆனந்தபரவசா் பூங்காவில் அமைந்துள்ள வனதுா்க்கா தேவி கோயிலில் வசந்த நவராத்திரி விழா வியாழக்கிழமை தொடங்கியது. விழாவில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று வழிபட்டாா். இதில், ஆதீனக் கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழாவில், நாள்தோறும் வனதுா்க்காதேவிக்கு லட்சாா்ச்சனை, சகஸ்ரநாம அா்ச்சனை, நவசக்தி அா்ச்சனை, தேவி மகாத்மியம், அபிராமி அந்தாதி பாராயணம் செய்யப்பட்டு, நிறைவு நாளான மாா்ச் 27-ஆம் தேதி காலை சப்தஸதி விசேட பூஜா ஹோமம் நடைபெறவுள்ளது.