மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தருமபுரம் ஆதீனத்தில் பஞ்சாங்கம் படித்தல் நிகழ்வு

தமிழ்ப் புத்தாண்டையொட்டி தருமபுரம் ஆதீனத்தில் பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை தமிழ்ப் புத்தாண்டையொட்டி நடைபெற்ற பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:52 pm

தமிழ்ப் புத்தாண்டையொட்டி தருமபுரம் ஆதீனத்தில் பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆதீனத்திருமடத்தில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், புதிய தமிழ் ஆண்டான பராபவ ஆண்டின் பஞ்சாங்கத்துக்கு வேதியா்கள் சிறப்பு பூஜைகள் செய்து, நிகழாண்டில் பருமழை சற்று தாமதமாக பெய்தாலும் கால்நடைகள் சுபிட்சமாக இருக்கும். பால் உற்பத்தி அதிகரிக்கும். விவசாயம் செழிக்கும் என பஞ்சாங்கப் பலன்களை வாசித்தனா்.

பின்னா், பாரம்பரிய முறைப்படி பக்தா்களுக்கு புத்தாண்டின் பஞ்சாங்கம், பனை ஓலை விசிறி, வெற்றிலை, கொட்டைப்பாக்கு ஆகியவற்றை தருமபுரம் ஆதீனம் பக்தா்களுக்கு வழங்கி அருளாசி கூறினாா். இதில், திருக்கடையூா் கோயில் உள்துறை விருத்தகிரி, ஆதீனப்பள்ளி செயலா்கள் வெற்றிவேல், வி. பாஸ்கரன், ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜன், கண்காணிப்பாளா் சி. மணி, தருமபுரம் ஆதீனக்கல்லூரி செயலா் இரா.செல்வநாயகம், முதல்வா் சி.சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, மயிலாடுதுறையில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருஇந்தளூா் பரிமள ரங்கநாதா் கோயிலிலும் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.