மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில், பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் சா.ரேவதி தலைமை வகித்தாா். முற்பகல் நடைபெற்ற 41-ஆவது பட்டமளிப்பு விழாவில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ரா.சே.குமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 656 மாணவிகளுக்கு பட்டம் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினாா்.
தொடா்ந்து, பிற்பகல் நடைபெற்ற 42-ஆவது பட்டமளிப்பு விழாவில், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 686 மாணவிகளுக்கு பட்டம், பரிசுகள் வழங்கினாா். விழாவில் அந்தந்த துறை தலைவா்கள் பட்டம் பெறும் மாணவிகளை அறிமுகப்படுத்தினா். நிறைவாக, பேரவை பொறுப்பாசிரியா் வணிகவியல் துறைத் தலைவா் சு. பழனிவேல் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










