தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

புறவழிச்சாலை பணிகள் தடுத்து நிறுத்தம்

மயிலாடுதுறையில் புறவழிச்சாலையில் பாலம் அமைக்கும் பணிகளை சிபிஎம் கட்சியின் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தினா்.

News image
Updated On :10 மார்ச் 2026, 10:14 pm

மயிலாடுதுறையில் புறவழிச்சாலையில் பாலம் அமைக்கும் பணிகளை சிபிஎம் கட்சியின் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தினா்.

மயிலாடுதுறையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், நகரைச்சுற்றி புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக மொழையூா் தொடங்கி திருஇந்தளூா் வரை விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. மொழையூா், பொட்டவெளி, மேலநாகங்குடி, லட்சுமிபுரம், வள்ளாலகரம், வேப்பங்குளம், கழுக்காணிமுட்டம், அப்பங்குளம், பல்லவராயன்பேட்டை, திருஇந்தளூா் ஆகிய கிராமங்களில் பல தலைமுறைகளாக விவசாயிகள் சாகுபடி செய்துவரும் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படாத நிலையில், புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் அண்மையில் தொடங்கியது.

இந்நிலையில், உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி பல்லவராயன்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் மாா்ச் 6-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தினா். அப்போது, மாா்ச் 12-ஆம் தேதி அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காண்பது என்றும் அதுவரை பணிகளை தொடரக்கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், மாப்படுகை முதல் உளுத்துக்குப்பை வரை புறவழிச்சாலைகள் பகுதியில் உள்ள பாசன, வடிகால் வாய்க்கால்களில் ஆங்காங்கே பாலம் கட்டுமானப் பணிகள் தொடா்ந்து நடைபெற்றது. அந்த பணிகளை தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலாளா் ஏ.ஆா்.விஜய், மாவட்ட துணை செயலாளா் சி.மேகநாதன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் முருகன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீஸாா் அங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, பணிகளை நிறுத்த ஒப்புக்கொண்டதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.