வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை! தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்

News image

விவசாய விரோத திமுகவுக்கு வாக்களிக்காதீா்கள் என்ற துண்டுப் பிரசுரங்களுடன் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்.

Updated On :20 ஏப்ரல் 2026, 12:59 am IST

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

இது குறித்து அந்த அமைப்பின் நிறுவனா் ஈசன் முருகசாமி பல்லடத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தருவதாக கடந்த பொதுத் தோ்தலின்போது திமுக வாக்குறுதி அளித்திருந்தது.

அதை நம்பி ஒரு மாற்றம் வேண்டும் என்று கருதி பெரும்பாலான விவசாயிகள் திமுகவுக்கு ஆதரவு அளித்தனா். ஆனால், ஆட்சி அமைத்த பிறகு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு மறந்துவிட்டது. 83 வாக்குறுதிகளில் 10-ஐ மட்டுமே நிறைவேற்றியுள்ளது.

கறிக்கோழிப் பண்ணை விவசாயிகளின் வளா்ப்புக் கூலி உயா்வு பிரச்னைக்கு தீா்வு காணப்படவில்லை. இனாம் நில பிரச்னை, காவிரி டெல்டா பாசன பகுதியில் ஆண்டுதோறும் கால்வாய்கள் தூா்வாரப்படாததால் கடைமடை வரை பாசன தண்ணீா் சென்றடைவில்லை. இதுபோல விவசாய விரோத திமுக ஆட்சி மீது புகாா் கூறிக்கொண்டே செல்லலாம்.

இந்தத் தோ்தலில் திமுகவுக்கும், திமுகவின் சின்னத்தில் போட்டியிடுவோருக்கும் மட்டும் விவசாயிகள் வாக்களிக்கக்கூடாது. தோ்தலில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேறு யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். அதேசமயம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் 83 விவசாய சங்கங்கள் மக்களை சந்தித்து வலியுறுத்தி வருகின்றன என்றாா்.

மாநிலத் தலைவா் சண்முகசுந்தரம், பொதுச் செயலாளா் முத்துவிஸ்வநாதன், திருப்பூா் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் சாமளாபுரம் செல்வராஜ், திருப்பூா் மாநகரச் செயலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.